"இதை செஞ்சா பணம் கையில" - ஆசை வார்த்தையில் விழுந்த பெண் - ரூ.10 லட்சத்தை சுருட்டிய இருவர்

Update: 2023-11-17 14:22 GMT
  • ஆன்-லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி, பெண்ணிடம் பத்து லட்சம் ரூபாய் பண மோசடி செய்த கும்பலை கேரளாவில் வைத்து கரூர் சைபர் கிரைம் போலீசார்              கைது செய்தனர்.
  • கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம், டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், யூடியூப்பில் சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் கொடுப்பதாகவும் கூறி கும்பல்             வலை விரித்துள்ளது.
  •   வலையில் விழுந்த அப்பெண்ணை, டாஸ்க் பெயரில் பணத்தை முதலீடு செய்ய வைத்த அந்த கும்பல், டாஸ்க் முடிந்தவுடன் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை                        கூறியுள்ளனர்.
  • இவ்வாறு, ஆன்லைன் வர்த்தகம் பெயரில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை இழந்த அப்பெண், போலீசில் புகாரளித்தார்.
  • விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ராகவன் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் ஆகிய இருவர் பெண்ணிடம் மோசடி செய்தது தெரியவர,         இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
  • செல்போன் சிக்னலின் அடிப்படையில் இருவரும் கேரளாவில் இருப்பது தெரியவர, கேரளாவின் பாலக்காட்டிற்கு விரைந்த கரூர் சைபர் கிரைம் போலீசார், இருவரையும் கைது செய்து           சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்