`உச்ச நீதிமன்ற தீர்ப்பு' "அதிமுக வெட்கப்பட வேண்டும்" - திமுக

Update: 2024-08-04 02:52 GMT

அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அருந்த‌தியர் இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றதை விமர்சித்துள்ளனர். அருந்ததியர் சமூகத்தினர் மீது அதிமுகவுக்கும் ஏன் திடீர் பாசம்? என்று வினவியுள்ளனர். அருந்த‌தியர் சமூகத்திற்கு திமுக அரசு உள் ஒதுக்கீடு வழங்கிய நேரத்தில், ஏன் ஜெயலலிதா எதிர்த்தார்? என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். தமிழக அரசு, 2009-ஆம் ஆண்டு அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, அந்தத் தமிழக அரசு, திமுக அரசு எனச் சொல்ல என்ன தயக்கம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருப்பதாகவும், அப்போது எதிர்த்துவிட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும் என்றும் விமர்சித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்