தந்தி டிவியின் தாக்கம்.. உடனடியாக நிகழ்ந்த மாற்றம்

Update: 2024-09-02 08:55 GMT

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி அண்ணன், தங்கைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் கிடைத்துள்ளது. மாம்பாக்கம் கிராமத்தில் அண்ணன் தங்கைகளான பிரவீன் குமார் மற்றும் திவ்யா ஆகியோர், பிறக்கும்போதே கால்கள் செயலிழந்த நிலையில், பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர். அவர்களின் நிலை குறித்து, 29ஆம் தேதி தந்தி டிவி செய்தியில் சிறப்பு தொகுப்பு வெளியானது. இதன் எதிரொலியாக, அவர்களது இல்லத்திற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார் நேரில் சென்று, எலக்ட்ரானிக் வாகனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்