ஆசையாக வாங்கிய புது கார் - அடுத்த நொடியே உயிர் காவு - பூஜைக்கு போன இடத்தில் ரத்த வெள்ளம்

Update: 2024-09-24 05:38 GMT

தஞ்சாவூர் அருகே பூஜை போட வந்த புதிய கார் மோதி, கோயிலிலேயே மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த நாடிமுத்து, புதிதாக கார் ஒன்றை வாங்கிய நிலையில், அதற்கு பூஜை போட நாடியம்மன் கோயிலுக்கு எடுத்து வந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், கோயில் வாசலில் வியாபாரம் செய்து கொண்டிருந்த மூதாட்டி மற்றும் இந்துமதி என்ற பெண் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார். காரின் அடிப்பகுதியில் சிக்கிய இந்துமதி, பலத்த காயம் அடைந்தார். நெ​ஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்