20 மணி நேரம் இடைவிடாமல்.. ஒட்டுமொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த தமிழக சிறுவன்

Update: 2024-10-11 09:37 GMT

இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரங்களில் நீந்தி 12 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு படகு மூலம் சென்ற லக்ஷய் கிருஷ்ணகுமார், அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி நீந்தியுள்ளார். இதுபோன்ற சாகசத்தை பல குழந்தைகள் செய்திருந்தாலும், அறிவுசார் குறைபாடு கொண்ட குழந்தைகளில் மிக சிறிய வயதில் இந்த சாதனையை படைத்துள்ள முதல் சிறுவன் என்ற பெருமையை லக்ஷய் கிருஷ்ணகுமார் பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்