தப்பை தட்டிக்கேட்ட கவுன்சிலர்.. ராணுவவீரர் செய்த அடாவடி - வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2024-09-17 14:42 GMT

கன்னியாகுமாரி மாவட்டத்தில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்த நபர்களை தடுத்து நிறுத்திய பேரூராட்சி கவுன்சிலரை மத்திய துணை ராணுவ வீரர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

தக்கலை அருகே காட்டாத்துறையை சேர்ந்த ஜெபின்பிராங்கிளின், வாள்வச்சக்கோஷ்டம் பேரூராட்சி திமுக கவுன்சிலராக உள்ளார். அதேபகுதியை சேர்ந்த கபரில், அவரது மகன்களான மத்திய துணை ராணுவ வீரர் ஜோஸ் மற்றும் ஜேம்ஸ், சட்டவிரோதமாக மண் எடுத்து செல்வதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்றபோது ஜோஸ் உள்ளிட்டோர் தாக்கியதில் காயமடைந்த ஜெபின்பிராங்கிளின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை ராணுவ வீரர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்