திமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த ஊராட்சி தலைவர் - பின் நடந்த பரபரப்பு சம்பவங்கள்

Update: 2024-10-10 08:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக வீராசாமி என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்த அவர், திடீரென அங்கிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், தன்னை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாகவும், திருப்போரூர் ஒன்றிய தலைவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறிய வீராசாமி, 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் வந்து திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்