43 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - பேப்பரில் எழுதி இருந்ததை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்

Update: 2024-10-09 16:27 GMT

தஞ்சாவூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் முத்துக்குமரன். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, கடந்த ஆகஸ்ட் மாதம் சைல்டு ஹெல்ப் லைனில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு நடத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, 43 மாணவிகள் ஆசிரியர் முத்துக்குமுரன் மீதான பாலியல் புகாரை துண்டு சீட்டில் எழுதி அதிகாரிகளிடம் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து, ஆசிரியர் முத்துக்குமரன் பணி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இரு மாதங்கள் கழித்து ஒரத்தநாடு மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளிக்கப்பட்டதை அடுத்து, போக்சோவின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவான ஆசிரியர் முத்துக்குமரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்