ஆட்சியர் முன்பு கைகலப்பு... பரபரப்பான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் | Thanjavur | Thanthi TV

Update: 2024-09-27 17:25 GMT

தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் முன்பு இரு தரப்பு விவசாயிகள் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளிடம் வரிசையாக மைக்கை கொடுத்து குறைகளை கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சுகுமார் என்ற விவசாயி தலைமையில் வந்தவர்கள் நேரடியாக எழுந்து ஆட்சியரிடம் சென்று குறைகளை தெரிவித்ததால் மற்ற விவசாயிகள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தை முறையாக நடத்த விடாமல் பிரச்சனை செய்வதாக குற்றம் சாட்டிய மற்றொரு தரப்பு விவசாயி ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்தார். அப்போது சுகுமார் தலைமையில் வந்த ஒரு விவசாயி, குற்றம்சாட்டிய விவசாயியை தாக்கினார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் போலீசார் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்