"யாரோ செஞ்ச தப்புக்கு நான் பலிகடாவா?" - பேசும் போதே கதறி கதறி அழுத HM

Update: 2024-09-25 07:37 GMT

தென்காசியில் தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஆசிரியை கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணமின்றி பணியிட மாறுதல் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக கூறி பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தலைமை ஆசிரியை ஒருவர், பள்ளிகளை நிர்வகிப்பதில் தலைமை ஆசிரியர்களுக்கு பணி சுமைகள் ஏற்படுகிறது. இவைகளை கடந்து மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் பணியாற்றினால் தங்களுக்கு பரிசாக பணியிட மாற்றம் கிடைக்கிறது. யாரோ ஒருவர் செய்யக்கூடிய தவறுகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பலிகடா ஆக்கப்படுவதால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி கண்ணீர் மல்க பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்