திடீரென ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்த அமைச்சர் மா.சு. - பார்த்து வெலவெலத்து போன டாக்டர்ஸ்

Update: 2024-10-24 02:47 GMT

திடீரென ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்த அமைச்சர் மா.சு. - பார்த்து வெலவெலத்து போன டாக்டர்ஸ்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகள் பிரிவு, மருத்துவமனை கட்டமைப்புகளை பார்வையிட்டார். இடிந்து விழும் நிலையில் இருக்கும் பிணவறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். பின்னர் புறநோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்தும், ஏதேனும் குறைகள் உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் விசாரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்