ரெடியா இருங்க மக்களே...இன்று தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று நடக்கும் பணி

Update: 2024-08-20 02:26 GMT

தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி, இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நாளாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதற்காக, இன்று முதல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேசமாக மறுசீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்.29ம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிச.24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்