குடும்ப பிரச்சனையில் நடந்த விபரீதம் - மாமனாருக்கு எமனான மருமகன்

Update: 2024-02-13 05:47 GMT

திருப்போரூர் அருகே ஒத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் ஆறுமுகம். இவரது மகள் டில்லியம்மாள், ஆனந்தன் என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில், 2 பிள்ளைகள் உள்ளன. தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, டில்லியம்மாள் கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே, ஆனந்தன் தனது நண்பர்கள் இருவருடன் மாமியாரின் வீட்டிற்கு சென்று, டில்லியம்மாளை வீட்டிற்கு அழைத்துள்ளார். மேலும் மாமனார் ஆறுமுகத்திடம் ஆனந்தன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஆனந்தன், கட்டையை எடுத்து தலையில் அடித்ததில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளான சிவக்குமார், சின்னப்பா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்