சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்.. 3வது கண்ணில் கை வைத்த விஜய்

Update: 2024-10-27 03:13 GMT

சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்.. 3வது கண்ணில் கை வைத்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு, கட்சியின் தலைவர் விஜய், மாநாடு நடைபெறும் திடல் அருகே 2 வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு விஜய் ஓய்வெடுக்க செல்வதாக கூறப்படும் நிலையில், அந்த வீட்டின் முன்பு சிறிதுநேரம் ஒரு கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு திடலில் நேற்று மாலை உள்ளே சென்ற நடிகர் விஜய், மாநாட்டுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டுத் தெரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாநாட்டு அரங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம், விஜய் சிறிதுநேரம் பணிகளை ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்