``மிரட்டுறாங்க..'' - கண்ணீர்விட்டு அழுத பெண் கவுன்சிலர்... மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

Update: 2024-10-21 13:44 GMT

தாம்பரம் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 38ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சரண்யா பேசும் போது, தன்னுடைய வார்டில் கழிவு நீர் தண்ணீர் இறைக்க வைத்திருந்த மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்றதற்கு இந்த பகுதியை சேர்ந்த நபர் தன்னையும் தன் குடும்பத்தையும் மிரட்டுவதாக கூறி அழுதார். இதனைத் தொடர்ந்து மேயர் மற்றும் பெண் கவுன்சிலர்கள் அவரை சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இது தொடர்பாக மேயர் விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்