அச்சுறுத்தும் தெரு நாய்கள்..களமிறங்கிய ஆணையர் ராதாகிருஷ்ணன்..வெளியான அதிமுக்கிய தகவல்

Update: 2023-11-28 13:01 GMT

சென்னையில் இரண்டாவது நாட்களாக நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராயபுரம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதியில் இருக்கக்கூடிய நாய்களுக்கு சட்டத்திற்கு உட்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும்

இதற்கு நாயை தத்தெடுத்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தெருக்களில் நாய் இருக்கும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும் எனவும் சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னையில் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்