கதறி அழுததும் கண்ணீரை துடைத்து விட்டு கலங்கிய சீமான்.. மொத்த கூட்டமும் உறைந்த தருணம்

Update: 2024-10-21 05:56 GMT

கதறி அழுததும் கண்ணீரை துடைத்து விட்டு கலங்கிய சீமான்.. மொத்த கூட்டமும் உறைந்த தருணம்

நாமக்கல்லில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்தும், வளையபட்டியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தையும் கைவிட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் , திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

மக்களிடம் காட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை, ஏன் பிரதமர் மோடியிடம் காட்டலில்லை என்றும், நீட் தேர்வுக்கு எதிராக பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துக்கள் என்ன ஆனது என்றும்

சீமான் கேள்வி எழுப்பினார். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கோரிக்கையை சொன்ன மூதாட்டிக்கு சீமான் ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்