தலைமை செயலகத்தை நோக்கி பேரணி.. நடுரோட்டில் லாக் செய்த போலீஸ்

Update: 2024-02-08 17:17 GMT

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விநியோகம் செய்யப்படுவதற்கு பதிலாக, தமிழகத்தில் பயிரிடப்படும் தேங்காய், நிலக்கடலை மூலம் வரும் தேங்காய் எண்ணெயையும் நிலக்கடலை எண்ணையையும் விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் முற்றுகை பேரணி செல்ல முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து தரதரவென இழுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்