கூட படித்த மாணவனை ஆள் வைத்து கடத்திய சக மாணவன் - பள்ளியையே அதிரவைத்த சம்பவம்

Update: 2024-08-14 05:11 GMT

புதுக்கோட்டையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மீட்கப்பட்ட விவகாரத்தில், அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கடத்தப்பட்ட12ம் வகுப்பு மாணவனை மீட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பள்ளியில் பயின்று வரும் மற்றொரு மாணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த மாணவன் ஆள் வைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவனிடம் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்