சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

Update: 2024-10-06 16:28 GMT

சேலத்தில் நேற்றிரவு பெய்த ஒரு மணி நேர கனமழையால் சூரமங்கலம் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்த‌து. முல்லை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், வயதானவர்கள் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. அரசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள், புத்தகங்கள் உள்ளிட்டவை மழைநீரில் சேதமடைந்த‌தாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்