பிள்ளைகளை ஒருவன் கொலை செய்து கொண்டிருந்தது கூட தெரியாமல் போனில் பாட்டு கேட்ட தந்தை

Update: 2024-10-16 08:36 GMT
  • பிள்ளைகளை ஒருவன் கொலை செய்து கொண்டிருந்தது கூட தெரியாமல் போனில் பாட்டு கேட்ட தந்தைசேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள ஒருவன் காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரும் இவரது சித்தப்பா மகனான தனசேகரும் அருகருகே வசித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே நிலத் தகராறு இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ராஜாவின் மகனான 15 வயது சுகனும், மகளான 17 வயது நவீனாவும், சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளனர். இருவரும் அருகேயுள்ள விவசாய நிலத்தில் பூப்பறிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கு வந்த தனசேகர், அண்ணன் பிள்ளைகளான இருவரையும் கத்தியால் கழுத்தறுத்து கொன்று விட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
  • இந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த தனசேகரனை போலீசார் கைது செய்த நிலையில், தனசேகரனின் மைத்துனர் கார்த்திக்குக்கும் கொலையில் தொடர்பிருப்பதாக கூறி ராஜாவின் ஊறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, போலீஸ் விசாரணையில் தனசேகரன் திடுக்கிடும் தகவலை தெரிவித்திருக்கிறார். தனது மனைவியிடம் ராஜா தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரின் குழந்தைகளை கொன்று பழிதீர்த்ததாகவும் அவர் தெரிவித்திருப்பது 
Tags:    

மேலும் செய்திகள்