ஈபிஎஸ்-ன் நண்பர் -வெட்டி சாய்த்த கும்பல் சேலத்தை நடுங்கவிட்ட கொலை கதறும் மனைவி; சிக்கிய 9 பேர்

Update: 2024-07-04 17:14 GMT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் அதிமுகவின் கொண்டலாம்பட்டி பகுதி செயலாளருமான சண்முகம், மர்மகும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு சேலம் 55 ஆவது வார்டு கவுன்சிலர் தனலட்சிமியின் கணவர் சதீஷை குற்றம் சுமத்திய உறவினர்கள், உடலை வாங்க மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், சண்முகத்தின் உறவினர்களுடன் சேலம் மாநகர காவல் துனை ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்