அடித்து கொன்று தாலி பறிப்பு.. தூக்கம் தொலைய வைத்த வடமாநில கொள்ளையர்கள் - வெகுண்டெழுந்த மக்கள்

Update: 2024-10-07 06:51 GMT

அடித்து கொன்று தாலி பறிப்பு.. தூக்கம் தொலைய வைத்த வடமாநில கொள்ளையர்கள் - வெகுண்டெழுந்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மூதாட்டியை அடித்து கொன்று தாலி சங்கிலியை பறித்த கும்பலை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சின்னபிள்ளை என்ற மூதாட்டி முனைக்காடு பகுதியில் இருந்து பால் விற்பனைக்கு செல்லும் போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்மநபர்கள் அவரை தாக்கி தாலி செயினை பறித்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கொலையாளிகளை பிடிக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்