போலீஸ் செய்த கேடி வேலை - வேதனையில் குமுறும் நபர்

Update: 2024-09-28 02:21 GMT

சேலம் டி.பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரனின் தாயார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தநிலையில் வெளியே வந்து பார்த்தபோது வெங்கடேசன் நிறுத்தி இருந்த பைக் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் புகாரளித்தநிலையில், போலீசார் பைக்கை மீட்டுவிட்டதாக அவரிடம் கூறி உள்ளனர். கோர்ட்டில் சாட்சி சொல்லிவிட்டு காவல்நிலையத்தில் வந்து பைக்கை எடுத்து செல்லுமாறு கூறியதால் கோர்ட்டில் சென்று வெங்கடேஷ்வரன் சாட்சியளித்துள்ளார். தொடர்ந்து காவல்நிலையம் வந்தபோது, பைக்கின் மட்கார்டு, இன்ஞ்சின் அருகே உள்ள டோர் ஆகியவற்றை மட்டுமே போலீசார் கொடுத்ததால் வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார். திருடனிடம் இருந்து இதைமட்டுமே மீட்டதாக போலீசார் தெரிவித்தநிலையில், தாயையும் இழந்து, பைக்கையும் இழந்துவிட்டதாக வெங்கடேஸ்வரன் வேதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்