பீச்சுக்கு தனிமையில் சென்ற காதல் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி - நோட்டமிட்டு போலீஸ் செய்த வேலை

Update: 2024-09-27 07:48 GMT

காரைக்காலில் காதல் ஜோடியிடம் அத்துமீறிய புகாரில், கடலோர காவல்நிலைய காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், காரைக்கால் கடற்கரைக்கு சென்ற காதல் ஜோடியிடம் பணம் பறித்ததோடு, பெண்ணிடம் அத்துமீறிய கடலோர காவல்நிலைய காவலர் ராஜ்குமார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், காரைக்கால் காவல் நிலையத்தில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள காவலர் ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்