நகராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. அடுத்தடுத்து சிக்கிய பணம்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..

Update: 2024-10-25 16:23 GMT

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில், லஞ்ச

ஒழிப்பத்துறை போலீசார் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளனர்

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி, டென்டர் அளிக்க ஒப்பந்ததாரர்களிடம் 8 சதவீதம் கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரரான ஷக்கீர் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீரென நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தலைவர் சிவகாமி மற்றும் துணைத் தலைவர் நாகராஜ் அறைகளில் இருந்து கணக்கில் வராத மூன்று லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயை கைப்பற்றினர். பல்வேறு ஆவணங்களையும் கைபற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்