``சஸ்பெண்ட்.. டிஸ்மிஸ்.. அதிரடி''..அரசு ஊழியர்களை அலறவிடும் கலெக்டர் - பரபரக்கும் மாவட்டம்

Update: 2024-07-23 05:23 GMT

சஸ்பெண்ட்.. டிஸ்மிஸ்.. அதிரடி''..அரசு ஊழியர்களை அலறவிடும் கலெக்டர் - பரபரக்கும் மாவட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியரை கண்டித்து, அதிகாரிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன், அரசு ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், நடவடிக்கை என்ற பெயரில் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியரை சந்தித்து, அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கோரியதாகவும் அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்