மகாவிஷ்ணுவிடம் 5 மணி நேர விசாரணை... கேள்விகளை அடுக்கிய போலீஸ்

Update: 2024-09-12 16:32 GMT

பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணுவிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றது.

சென்னையில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தில் உள்ள அவரது அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணையின் முடிவில், வங்கி பண பரிவர்த்தனை, நன்கொடை விவரம், முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குறுகிய காலத்தில் வெளிநாடுகளில் கிளைகளை பரப்பியது எப்படி என விசாரித்த போலீசார், மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்களின் பட்டியலையும் சேகரித்துச் சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்