தொண்டையில் சிக்கிய தைல டப்பா..உயிருக்கு போராடிய குழந்தை - மதுரையில் அதிர்ச்சி

Update: 2024-10-02 07:23 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை, அரசு மருத்துவர் ஒருவர் 15 நிமிடம் போராடி வெளியே எடுத்தார்.

திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஹசீனாபானு. இவரது இரண்டரை வயது பெண் குழந்தை ஆலியா, தைலா டப்பாவை வாயில் போட்டுள்ளது. இந்த தைலடப்பாவானது குழந்தையின் தொண்டையில் சிக்கியதை தொடர்ந்து, குழந்தையானது திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே இருந்த அரசு மருத்துவர் சிவகரன், 15 நிமிடம் போராடி தைல டப்பாவை வெளியே எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்