டாப் 10 பட்டியலில் மதுரை தொடர்ந்து முதல் இடம் | Madurai

Update: 2024-09-26 13:17 GMT

சாதிய வன்கொடுமைகளில் மதுரை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அளித்த பதிலில் இது தெரிய வந்துள்ளது.

அதில், தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் டாப்-10 பட்டியலில் மதுரை தொடர்ந்து முதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதி வன்கொடுமைகள் நடைபெறும் தமிழகத்தின் 394 கிராமங்களில் தென் மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் கடைபிடிக்கப்படுவதாகவும் திருநெல்வேலியில் 29 கிராமங்களிலும் திருச்சியில் 24 கிராமங்களிலும் சாதிய வன்கொடுமைகள் அதிகமுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்