பேருந்துக்குள் கண்டக்டர் மீது தாக்குதல்- இளைஞர்களுக்கு போலீசார் வலை/

Update: 2024-09-20 00:35 GMT

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்ட தனியார் பேருந்தில் மது போதையில் ஏறிய மூன்று பேர், பெண்கள் அருகில் அமர்ந்துள்ளனர். அவர்களை நடத்துனர் விகாஸ் வேறு இருக்கையில் அமருமாறு கூற, இடத்தை மாற்றி அமர முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்கள், நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து நடத்துநர் விகாஸ் அளித்த புகாரில், கும்பகோணம் மேற்கு போலீசார், பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்