அந்த பாதையில் உயிரை கையில் பிடித்து செல்லும் மக்கள் - அலறிக்கொண்டே ஓடிய அதிகாரிகள்

Update: 2024-09-22 03:23 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளங்கி, கோம்பை மலைக்கிராமங்களில் திடீரென 2 காட்டு யானைகள் முகாமிட்டன. யானைகளால் சாலையை கடக்க மக்கள் பீதியடைந்த நிலையில், தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். மக்களுடன் சேர்ந்து ஒலி எழுப்பிய வனத்துறை அதிகாரிகள், காட்டு யானைகளை அடர்ந்த பழனி வனப்பகுதிக்குள் விரட்டி சென்றனர். சாலைகளில் முகாமிடும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் நிரந்தரமாக விரட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்