ஒரு ஊரையே காலி பண்ண சொல்லும் தனி நபர் - அதிர்ச்சி பின்னணி

Update: 2024-09-27 06:30 GMT

கொடைக்கானல் அருகே 50 ஆண்டுகளாக வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை தனிநபர் ஒருவர் அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். அஞ்சு வீடு என்கிற கணேசபுரத்தில் தொடக்கத்தில் 5 வீடுகள் மட்டுமே இருந்ததாக கூறும் கிராம மக்கள், 1979-க்கு பிறகு யாருக்கும் பட்டா கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அங்குள்ள ஒரு இடத்தில் வீடு கட்டி வசிக்கும் பொதுமக்கள் சிலரை தனிநபர் ஒருவர் வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலியாக பட்டா பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ரேசன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு காடுகளில் குடியேறப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்