"16 வயது சிறுவன்.. 30 வயது மங்கை.." ஜவுளி கடையில் காதல்.. கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில் சிக்கினர்

Update: 2024-07-16 05:47 GMT

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள துணிக்கடைகளில் பணியாற்றி வந்த 16 வயது சிறுவனுக்கும் அதே கடையில் பணியாற்றி வந்த 30 வயதான மனதேவி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இந்த விவகாரம் தெரிய வந்ததும் சிறுவனின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுவனும் அந்தப் பெண்ணும் வடபழனி கோயிலில் திருமணம் செய்துவிட்டு, வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் சென்றுள்ளனர்.

செல்போன் எண்ணை வைத்து சிறுவன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருப்பதை கண்டு பிடித்து பெற்றோர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனதேவியை காப்பகத்தில் தங்க வைத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்