2வது மனைவியின் தோழிக்கு ரூட்டு.. போலீசாருக்கு வந்த ஷாக் சேதி - கரூரை கலங்கடித்த கள்ளக்காதல் ஸ்கெட்ச்

Update: 2024-10-10 16:17 GMT

கரூரில், கள்ள உறவுக்கு வந்த எதிர்ப்பால், சதி திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்ற, 2 பெண்கள் உட்பட 9 பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர்.

ராயனூரைச் சேர்ந்த முகேஷ்

என்பவர் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு, திருமாநிலையூரைச் சேர்ந்த சோபனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வசித்து வந்துள்ளார். சோபனாவின் வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழியான ரம்யா, என்பவருக்கும் தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த மாதம்

பிரச்சனை ஏற்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு சோபனாவின் கணவர் முகேஷ், விஜயின் உறவினர்களை பழிவாங்க துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சோதனை நடத்திய போலீசார் முகேஷ் வீட்டில் இருந்து அரிவாள், கத்தி, கை துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கொலை திட்டம் தீட்டிய 2 பெண்கள், முகேஷ் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்