கொலையானவர் சட்டையை மோந்ததும் 8 கிமீ ஓடி வீட்டை பார்த்து குரைத்த நாய்..

Update: 2024-07-25 04:45 GMT

கொலையானவர் சட்டையை மோந்ததும் 8 கிமீ ஓடி வீட்டை பார்த்து குரைத்த நாய்..அந்த நேரம் உள்ளே இன்னொரு கொலை..?..கொன்னவன் யாருன்னா? படத்துலயே இப்படியொரு ட்விஸ்ட் இருக்காது

கொலையாளியைப் பிடிக்க உதவிய மோப்ப நாய் ஒன்று மற்றொரு கொலையைத் தடுத்ததுடன்...ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் சந்தேபென்னூர் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது... துங்கா 2 என்ற பெயர் கொண்ட மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்தனர்... இறந்து கிடந்தவரின் சட்டையை முகர்ந்து பார்த்த துங்கா-2 சன்னபுரா சாலையில் ஓட ஆரம்பித்தது. 8 கிலோமீட்டர் தூரம் இடைவிடாது ஓடிய துங்கா-2 வழியில் இருந்த வீட்டில் அலறல் சத்தம் கேட்கவே...அங்கு நின்று பலமாக குரைத்தது... போலீசார் உள்ளே சென்று பார்த்த போது ஒரு பெண்ணை ஒருவர் கடுமையாக தாக்கி படுகாயத்தை ஏற்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது... கொஞ்சம் விட்டிருந்தாலும் அப்பெண் சுய நினைவை இழந்திருப்பார்... துங்கா 2வால் அப்பெண் உயிர் பிழைத்தார்... பெண்ணைத் தாக்கிய ரங்கசாமி கைது செய்யப்பட்டார்... அதன்பிறகு தான் தெரிந்தது அவர்கள் தேடி வந்த கொலையாளியே ரங்கசாமி தான் என்பது... சடலமாகக் கிடந்தது ரங்கசாமியின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட சந்தோஷ் என்பது கண்டறியப்பட்டது... சந்தோஷை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த ரங்கசாமி தன் மனைவியையும் கொல்ல முயன்றுள்ளார்... இதில் சிறப்பாக பணியாற்றிய துங்கா-2 மோப்பநாய் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது... இதுவரை இந்த கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்