காவலரை கார் பானட்டில் தரதரவென்று இழுத்து சென்ற நபர் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2024-10-25 01:52 GMT

காவலரை கார் பானட்டில் தரதரவென்று இழுத்து சென்ற நபர் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை, காரி மீது ஏற்றி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில், காரை ஓட்டி வந்த நபர், காவலர் மீது மோதியபடி நிறுத்தாமல் காரை நகர்த்திக் கொண்டே வந்துள்ளார். சற்று நேரத்தில் காரை வேகமாக இயக்க, தடுமாறிய காவலர், கார் பேனட் மீது விழுந்துள்ளார். எதையும் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் காரை வேகமாக இயக்க, சுமார் 100 மீட்டர் தூரம் வரை சென்ற போக்குவரத்து காவலர் சாலையின் பக்கவாட்டில் விழுந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்