துப்புரவு பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்ட ஆட்சியர்

Update: 2024-09-22 07:53 GMT

காரைக்காலில் கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, தூய்மை பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மதிய விருந்து ஏற்பாடு செய்தார். அவர்களது குறைகளை கேட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சம்பளம் பாக்கியை வழங்க நடவடிக்கை எடுத்தார். பின்னர் தலைவாழை இலை போட்டு வடை பாயாசத்துடன், ஆறு வகையான உணவை அவரே பரிமாறினார். உடன் வந்த அதிகாரிகளையும் உணவு பரிமாற உத்தரவிட்டார். பின்னர் தூய்மை பணியாளர்களுட்ன் அமர்ந்து மாவட்ட ஆட்சியரும் சாப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்