போலீஸிடம் மட்டும் வண்டியோட சிக்கிடாதீங்க.. இல்லனா அத முழுசா மறந்திடுங்க..

Update: 2024-10-24 08:36 GMT

போலீஸிடம் மட்டும் வண்டியோட சிக்கிடாதீங்க.. இல்லனா அத முழுசா மறந்திடுங்க.. நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் உள்ளிட்ட மூன்று காவல் நிலையங்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் முக்கிய உதிரி பாகங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்கராபுரம், மூங்கில்துறைபட்டு, வடபொன்பரப்பி என மூன்று காவல் நிலையங்களில் பல்வேறு வகையான குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கு மேற்கூரை இல்லாத வெட்ட வெளியில் நிறுத்தப்படுகின்றன. இதனால் வெயில், மழைக்காலங்களில் வாகனங்கள் துருப்பிடிப்பதோடு, இன்ஜின், டயர், பேட்டரி உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்கள் கழற்றப்பட்டு, பழைய இரும்புக் கடைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்