கண்ணை மறைத்த ஆசை...தான் எங்கே இறங்கிணோம் என தெரியாமல் இறங்கி கதறிய சிறுவர்கள்

Update: 2024-07-18 10:15 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே புறா பிடிக்க கிணற்றுக்குள் இறங்கிய இரண்டு சிறுவர்கள் மேலே வரமுடியாமல் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் மற்றும் கிருபா ஆகியோர் ஒரு விவசாய கிணற்றுக்குள் புறா இருப்பதை பார்த்து அதனை பிடிக்க கயிறு மூலம் உள்ளே இறங்கி உள்ளனர். ஆனால், மேலே ஏற முடியாமல் இருவரும் கூச்சலிட்டதால் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்