இருக்கன்குடி மாரியம்மன் கோவில் யாருக்கு சொந்தம்..? - கலெக்டர் கடிதத்தால் - கொந்தளித்த வியாபாரிகள்

Update: 2024-10-13 16:01 GMT

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். இருக்கன்குடி மற்றும் நத்தத்துப்பட்டி என 2 ஊராட்சிகளும் சொந்தம் கொண்டாடுவதால் இது தொடர்பான வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆட்சியர் கோவில் நத்தத்துப்பட்டி ஊராட்சி எல்லையில் அமைந்துள்ளதாக இருக்கன்குடி ஊராட்சிக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

அவர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த செட்டுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருப்பதால் வெளியூர் பக்தர்கள் சிரமத்தை சந்தித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்