நடுக்கடலில் கோஷ்டி மோதல்..! மீனவர்கள் எடுத்த திடீர் முடிவு.. பதற்றத்தில் மொத்த நாகை | Fisherman

Update: 2024-09-30 11:22 GMT

நாகையில் செருதூர் பைபர் படகு மீனவர்களும், அக்கரைப் பேட்டையை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் நங்கூரக் கயிற்றை அறுத்தது தொடர்பாக மோதிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் விசைப்படகு மீனவர்கள் பைபர் படகை விரட்டி சென்று மூழ்கடிக்க முயன்றதுடன், அதிலிருந்த மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி தாக்குதல் தொடுத்தனர். இதில் காயமடைந்த 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பேட்டை மற்றும் செருதூர் மீனவர்களுக்கு இடையே செருதூரில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, செருதூர் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப் பேட்டை விசைப்படகு மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென செருதூர் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்