சிறுமிக்கு கண் அறுவை சிகிச்சை... எம்.பி கனிமொழி செய்த செயல்

Update: 2024-01-08 02:31 GMT

தூத்துக்குடி மாவட்டம் சொக்கப்பழங்கரை கிராமத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட எம்.பி கனிமொழியிடம், ரேவதி என்ற சிறுமி தனது கண் சிகிச்சைக்கு உதவி கோரினார். இந்தநிலையில் கனிமொழியின் உதவியால் அந்த சிறுமிக்கு, கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏரல் வட்டாட்சியர், ரேவதியின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். எம்.பி கனிமொழியும் ரேவதியிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். அப்போது ரேவதி, தனக்கு உதவியதற்காக நன்றி கூறியதுடன், வளர்ந்த பிறகு மருத்துவராகி சேவை செய்வேன் எனவும் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்