புகை கிளம்பிய அடுத்த நொடியில் எலும்புக்கூடாக மாறிய இ-பைக் - அதிர்ச்சி வீடியோ

Update: 2024-10-03 04:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமானது. ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் ரித்திக் குமார். இவருடைய மின்சார இருசக்கர வாகனத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னர் பற்றிய தீ, இருசக்கர வாகனம் முழுவதும் பரவிய நிலையில், இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக மாறியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்