திமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு.. சிக்கியதை பார்த்து அதிர்ந்த போலீஸ்

Update: 2024-10-18 06:58 GMT

திமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு.. சிக்கியதை பார்த்து அதிர்ந்த போலீஸ்


மதுரையில் முன்னாள் திமுக மண்டல தலைவர் குருசாமி வீட்டில் நடத்திய சோதனையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில், திமுக கிழக்கு மண்டல முன்னாள் தலைவராக இருந்த வி.கே.குருசாமி மீது 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அண்மையில் நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த குருசாமி தற்போது அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் மணிகண்டன் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரது கூட்டாளிகளான பழனிமுருகன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரும் அவருக்கு பாதுகாப்பாக அவரது வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில், அவரது வீட்டில்

கீரைத்துரை போலீசார் சோதனை மேற்கொண்டதில், நாட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பழனி முருகன், முனியசாமி ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்