கிறிஸ்தவ துண்டு பிரசுரங்கள் விநியோகம்- பாஜகவினர் வாக்குவாதம்

Update: 2024-10-03 06:06 GMT

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கிறிஸ்தவ துண்டு பிரசுரங்களை வழங்கியவர்களிடம் வாக்குவாதம் செய்த பாஜகவினரை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அங்குள்ள பூஞ்சோலை பகுதியில் 4 பேர் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதையறிந்த பாஜக மண்டல தலைவர் விக்கேஷ் தலைமையிலான கட்சியினர், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்