"அவளுக்கு நீ அண்ணா முறை"சொல்ல சொல்ல கேட்காமல் காதலித்த இளைஞர்.. காதலனை வெட்டி கடசியா குடும்பம்..

Update: 2024-09-08 02:43 GMT

தங்கை முறையுள்ள சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி வந்த இளைஞரைச் சிறுமியின் உறவினர்கள் வெட்டி கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் சென்னை துறை முகத்தில் லாரி ஒட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் கண்ணாபட்டியைச் சேர்ந்த தங்கை முறையுள்ள 17 வயது சிறுமியை ஒரு தலையாகக் காதலித்து வந்து இருக்கிறார். உறவினர்கள் எச்சரித்தும் மீண்டும் சிறுமியிடம் தொந்தரவு செய்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராம், பொன்னையா உட்பட மூவர் சேர்ந்து கபிலனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பொன்ராம் உட்பட மூவரைக் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்