கணவனுக்கு அன்பு மனைவியின் ஸ்கெட்ச்... தலை அசைத்ததும் தலையே இல்லாமல் போன பயங்கரம்

Update: 2024-10-26 09:13 GMT

கணவனுக்கு அன்பு மனைவியின் ஸ்கெட்ச்... தலை அசைத்ததும் தலையே இல்லாமல் போன பயங்கரம்

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, மனைவியும், அவருடைய கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரப்பூர் அருகே உள்ள கணபதிப்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கும், தமிழ் இலக்கியா என்ற பெண்ணிற்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கோவையில் கட்டிட வேலை செய்து வந்த ராஜாராம், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தபோது, ஊருக்கு வெளியே தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மொரப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், மனைவியின் கள்ளக்காதல் பிரச்சனையால் ராஜாராம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தமிழ் இலக்கியா அழகுப்பயிற்சிக்காக அரூருக்கு சென்றபோது, அங்கு சலூன் கடை நடத்தி வரும் சரவணகுமார் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதையறிந்த ராஜாராம் கண்டித்ததால், தமிழ் இலக்கியாவின் ஆலோசனைப்படி, ராஜராமை தனியாக அழைத்துச் சென்று அவரை மது அருந்த வைத்து, தலையில் கல்லைப்போட்டு சரவணகுமார் கொலை செய்துள்ளார். இதையடுத்து, சரவணகுமார், தமிழ் இலக்கியா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்