குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு.. வெளியான உத்தரவு | courtallam

Update: 2024-07-13 05:32 GMT

தொடர் சாரல் மழை காரணமாக, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் பயணிகள் இரவில் குளிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்