"40 வருஷமா இதுதான் நிலைமை" .. வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை நீர்

Update: 2024-10-14 02:25 GMT
  • கோவையில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அவதிக்குள்ளான பொதுமக்கள், பார்வையிட வந்த கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், ஆவாரம்பாளையத்தில் உள்ள பட்டாளம்மன் கோவில் வீதி முழுவதும் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து, வீடுகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மாநகராட்சி அதிகாரிகளும், வார்டு கவுன்சிலர் கண்ணகியும் அங்கு வந்தனர். அவர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அவர்கள், முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஆகி இருக்காது என்று கூறினார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்